மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கொழுக்கட்டை செய்ய டிப்ஸ்..

சுவையான கொழுக்கட்டைகளைச் செய்ய சில ஆலோசனைகள்.

News image

கொழுக்கட்டை

Updated On :31 ஆகஸ்ட் 2024, 6:30 pm

சுவையான கொழுக்கட்டைகளைச் செய்ய சில ஆலோசனைகள்:

கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது தண்ணீரோடு ஒரு கரண்டி பால் சேர்த்தால் விரிந்துப் போகாது.

பூரணம் கிளறும்போது பாகு அதிகமாகிவிட்டால் பருப்புப் பூரணமாக இருந்தால் கடலை மாவை பொன்னிறமாக வறுத்து சேர்க்க வேண்டும். தேங்காய் பூரணமாக இருந்தால் அரிசி மாவைக் கலக்க வேண்டும் இதனால் பூரணம் கெட்டியாவதுடன் உதிராமல் உருட்டவும் வரும்.

இட்லி தட்டில் வைப்பதற்குப் பதில் மூங்கில் தட்டின் மீது இலை அல்லது துணியை விரித்து அதன் மீது கொழுக்கட்டைகளை வைத்து வேகவிட்டால் சீக்கிரமாக வேகும். மணமாகவும் இருக்கும்.

பச்சரிசிக்குப் பதிலாக புழுங்கல் அரிசி மாவில் கொழுக்கட்டை செய்தால் சுவையும் கூடுதலாக இருக்கும்.

கொழுக்கட்டைகளை உருட்டி சிறிது நல்லெண்ணெய் தடவி ஆவியில் வேகவைத்தால் ஒட்டாமல் உடையாமல் இருக்கும்.

பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து நன்கு நைசாக அரைத்து கொஞ்சம் பால் விட்டு நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும் சட்டியில் இரண்டு கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு அதில் கரைத்த மாவை விட்டு அடுப்பில் வைத்து பத்து நிமிடம் நன்றாகக் கிளற வேண்டும் பிறகு அப்படியே நன்றாக மூடி வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து நன்றாக பிசைந்து உருட்டி தேவையான பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்ய வேண்டும்.

கடலைப் பருப்பு பூரணம் அரைக்கும்போது அதை மசிய அரைக்காமல் ஒன்றிரண்டாக அரைப்பதுடன் அதை சுருள கிளறிய பிறகு ஏலக்காய் பொடி, பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை போட்டு கொழுக்கட்டை செய்தால் சுவையாக இருக்கும்.

தேங்காய் பூரணத்துக்கு வெல்லம் சேர்க்கும்பொழுது, வெல்லப்பாகில் உள்ள கல்மண்களை நீரில் கரைத்து வடிகட்டி எடுத்த பிறகு பாகு செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.