சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

வத்தல், வடாம் போடும்போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்!

வீட்டிலேயே வத்தல், வடாம் போடும்போது கவனிக்க வேண்டிய விவரங்கள் பற்றி..

News image

தக்காளிப் பழம்- ஜவ்வரிசி வடாம் - DPS

Updated On :11 மார்ச் 2026, 11:00 am IST

கோடைக்காலத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதில் வடாம் மற்றும் வத்தல் போடுவதுதான் முதல் இடத்தில் இருக்கும். வீட்டிலேயே வடாம் போடும்போது கவனிக்க வேண்டியவை..

மீதமான சாதத்தில் பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயம் சேர்த்து கெட்டியாக அரைத்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து சாதம் வடாம் தயாரிக்கலாம்.

வத்தல் போட தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துவிட்டு அதிகாலையில் எழுந்து காய்ச்சினால் வெய்யில் வருவதற்குள் வடாம் போட்டுவிடலாம்

வத்தல் போடும்போது அதிக காற்று வீசும் பகுதியில் வைக்க வேண்டாம். தூசு பட்டு சாப்பிட முடியாமல் போகலாம்.

கொத்தமல்லி அதிகமாகவும், மலிவாகவும் கிடைக்கும் நேரங்களில் கொத்தமல்லி தழையை உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்து வடையாகத் தட்டி வெயிலில் காயவைத்து வடகமாகச் செய்துகொள்ளுங்கள். இந்த வடகத்தை குழம்பு, ரசத்தில் போட்டால் மிகவும் வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும். தயிர் பச்சடி செய்தால் சுவை அருமையாக இருக்கும்.

ஜவ்வரிசி வடாமுக்கு தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட்டால் கொஞ்சம் அவலை எடுத்து ஊறவைத்து, அதனுடன் கலந்துவிடுங்கள். மாவும் கெட்டியாகிவிடும். ஜவ்வரிசி வடாம் ருசியும் அதிகமாகவே கிடைக்கும்.

உருளைக்கிழங்கு நன்றாக வேக வைத்து தோல் நீக்கிவிட்டு அதனுடன் சீரகம், உப்பு ஆகியவற்றை நன்றாகப் பிசைந்து ஒரு வெள்ளை துணியில் சிறிய உருண்டை உருளைக்கிழங்கு மாவை வைத்து மெல்லிய வடைகளாகத் தட்டி வெயிலில் உலர்த்தி நன்றாகவே காய்ந்தவுடன் எண்ணெயில் பொரித்தால் உளுந்து அப்பளத்தைவிட சுவையாகவும் கரகரப்பாகவும் இருக்கும்.

வடாம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டு பார்த்தால் உப்பு குறைவாக இருந்தால் தான் காய்ந்தவுடன் உப்பு சரியாக இருக்கும்.

அரிசி வடாம் செய்வதற்கு அரிசியுடன் ஜவ்வரிசியைச் சேர்த்து அரைக்காமல் முதல் நாள் இரவு ஜவ்வரிசியை ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீருடன் சேர்த்து வேக வைத்து அரிசி மாவுடன் சேர்த்து செய்யும் வடாம் நன்றாக வெள்ளையாக இருக்கும்.

வடாம் கூழ் செய்யும்போது, சிறிது பாலை விட்டு கிளறினால் பொரித்தவுடன் வெண்மையாக இருக்கும்.

வடாமில் உப்பு அதிகமாகிவிட்டால் காய்ந்த வடாமை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் வைத்து எடுத்து மறுபடியும் வெயிலில் உலர்த்தினால் உப்பு போய்விடும்.

பாகற்காய் நிறைய வாங்கி மெல்லிய வட்டங்களாக அரிந்து உப்பு போட்டு குலுக்கி இரண்டு அல்லது மூன்று நாள்கள் வைத்திருந்து பின்னர் வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துகொள்ள வேண்டும். தேவையானபோது எண்ணெயில் பொரித்து உப்பு காரம் சேர்த்து பிசறி வெறும் வாயிலேயே கூட சாப்பிடலாம். கசக்கவே கசக்காது.

வடாமைப் பிழிந்து காய வைத்திருக்கும் இடத்தில் நான்கு மூலையிலும் நான்கு நாற்காலிகளைத் தலைகீழாகப் போட்டு வடாமுக்கு குறுக்கும் நெடுக்குமாக நூலை நன்றாகச் சுற்றி விட வேண்டும். இதை பார்க்கும் காகங்கள் ஏதோ வலை என்று நினைத்து அருகிலேயே வராது.

வடாம் செய்யும் கூழில் தக்காளி சாறு, கருவேப்பிலை, கொத்தமல்லி தழைச்சாறு, கேரட், பீட்ரூட் சாறு போன்றவற்றை கலந்தால் பல்வேறு நிறங்களில் வடாம்கள் தயாரிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.