தேவையான பொருள்கள்:
முடக்கற்றான் இலை- 1 கைப்பிடி
பெரிய வெங்காயம்- 1
பச்சை மிளகாய்-4
இஞ்சி- சிறிதளவு
தேங்காய்த் துண்டுகள்- 2 தேக்கரண்டி
உப்பு, நல்லெண்ணெய்- தேவையான அளவு
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, முடக்கற்றான் கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நன்றாக வதக்கவும். பின்னர், இந்தக் கலவையை அடைமாவில் கொட்டி கலந்து, அடைகளாகச் சுட்டெடுக்கவும்.