தேவையான பொருள்கள்:
பாகற்காய்- 300 கிராம்
புளி- 50 கிராம்
மஞ்சள் பொடி- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
பாகற்காயை வட்ட, வட்டமாக நறுக்க வேண்டும். புளியை தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டி பாகற்காயுடன் கலந்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து அடுப்பில் நன்றாக வேக வைக்க வேண்டும். காய் நன்றாக வெந்தவுடன் தண்ணீரை வடித்துவிட்டு பாகற்காய்த் துண்டுகளை வெயிலில் காய வைக்க வேண்டும். காய்ந்ததும் எடுத்துவைத்து தேவையான போது எண்ணெயில் வறுத்து வத்தக் குழம்பில் சேர்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.