நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதினா கோலா

சுவையான புதினா கோலா செய்முறை

News image
Updated On :22 ஜூன் 2024, 5:28 pm

ஆர்.ராதிகா

தேவையான பொருள்கள்:

புதினா கீரை - நன்கு ஆய்ந்தது

ஒரு கிண்ணம்

கடலைப் பருப்பு - கால் கிலோ

உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 5

வெள்ளைப் பூண்டு - 1

வெங்காயம் - 3

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

சோம்பு - 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

புதினா கீரையை மிக்ஸியில் இட்டு, விழுதாக அரைக்கவும். கடலைப் பருப்பு, உளுந்து இரண்டையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, நன்கு அரைத்து எடுக்கவும். மசாலா பொருள்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரைத்த கடலைப் பருப்பு விழுது, புதினா, மசாலா மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்டு, நன்கு பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், கலவையை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளைப் பிடித்து சிவக்க வேக வைத்து எடுத்தால், புதினா கோலா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.