தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்
அத்திப்பழம் -4 துண்டுகள்
பேரீச்சம் பழம், பாதாம் பருப்பு (ஊற வைத்து தோலுரித்தது), பிஸ்தா, செர்ரிப்பழம், முந்திரி - தலா10
காய்ந்த திராட்சை - 2 மேஜை கரண்டி
ஆல்பக்கோடா பழம் - 6
நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின்னர் உப்பு சேர்த்து அரிசியை கொர கொரப்பாக அரைக்கவும். பிஸ்தா, முந்திரி, பாதாம் இவற்றை விழுதாக அரைக்கவும்.
அத்திப்பழம், பேரீச்சை, செர்ரிப்பழம், ஆல்பக்கோடா, திராட்சை எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து மாவுடன் கலந்து அத்துடன் அரைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா விழுதையும் சேர்த்துக் கலந்து கல்லில் சிறு அடைகளாக தட்டி, இருபுறமும் நெய்விட்டு வெந்ததும் எடுக்கவும்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




