தேவையான பொருள்கள்:
வாழைப்பூ - 1 (தனியாக எடுத்து நறுக்கியது)
பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
அரைக்க..:
சோம்பு - அரை தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கிண்ணம்
இஞ்சி,பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 1 கிராம்பு-2
செய்முறை:
வாழைப்பூவின் உள்ளே இருக்கும் பூக்களை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும் பின்னர் குறிப்பிட்டுள்ள மசாலா பொருள்களை அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்க வேண்டும். அதன்பின்னர், வாழைப்பூ, பச்சை மிளகாய் , வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவை மிக்க குருமா ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

