தேவையான பொருள்கள்:
ஜவ்வரிசி- 400 கிராம்
பச்சரிசி- 750 கிராம்
தயிர்- 100 கிராம்
பெருங்காயம், மிளகாய்த் தூள்- தலா 1 தேக்கரண்டி
எள்- 1 மேசைக்கரண்டி உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியைக் கழுவி காய வைத்து அரைத்து சலிக்கவும். தயிரில் ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற விட வேண்டும்.
ஊறியவுடன் தயிருடன் மாவில் கொட்டி உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயம், எள் போட்டு சிறிது சூடான எண்ணெய் விட்டு பிசைய வேண்டும்.
அடுப்பில் வாணலியில் வைத்து எண்ணெயை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் முறுக்கு அச்சில் மாவு போட்டு, பிழிய வேண்டும். பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.