பருப்புப் பூரி

கோதுமை மாவுடன் கொஞ்சம் உப்பைச் சேர்த்து நீர்விட்டு பூரி தேய்க்கும் பக்குவத்தில் பிசைந்து மூடி வைக்க வேண்டும்.
பருப்புப் பூரி
Updated on
1 min read

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு- 200 கிராம்

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு- தலா 50 கிராம்

பச்சை மிளகாய்-4

பெருங்காயம்- அரை மேசைக் கரண்டி

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவுடன் கொஞ்சம் உப்பைச் சேர்த்து நீர்விட்டு பூரி தேய்க்கும் பக்குவத்தில் பிசைந்து மூடி வைக்க வேண்டும்.

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் கலந்து சுமார் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடித்து எண்ணெய் போல் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

பச்சை மிளகாய், பெருங்காயத்தைப் பருப்பில் சேர்த்து அரைத்து பின்பு மாவுடன் உப்பு சேர்த்து பிசைய வேண்டும். பூரிக்கட்டையில் வைத்து மாவைத் தேய்த்து பூரியாகப் போட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com