இன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்! அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம்‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புபேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புகர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மாம்பழச் சாறு சாதம்

பச்சரிசியைக் களைந்து நீரை வடிய வைத்து துணியில் போட்டு நிழலில் காய வைக்க வேண்டும்.

News image

மாம்பழச் சாறு சாதம்

Updated On :21 மார்ச் 2026, 10:32 pm

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

பச்சரிசி, சர்க்கரை- தலா 200 கிராம்

நெய் -100 கிராம்

இனிப்பான மாம்பழம்- 3

பாதாம் பருப்பு -5

திராட்சை, கற்கண்டு -தலா 50 கிராம்

ஏலப்பொடி -ஒரு தேக்கரண்டி

குங்குமப்பூ- சிறிதளவு

செய்முறை:

பச்சரிசியைக் களைந்து நீரை வடிய வைத்து துணியில் போட்டு நிழலில் காய வைக்க வேண்டும். பாதாம் பருப்பு அல்லது முந்திரிப்பருப்பை சிறிய துண்டுகள் செய்ய வேண்டும். கற்கண்டை ஒன்றிரண்டாய் பொடி செய்து கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் நெய் விட்டு பாதாம், திராட்சைகளை வறுத்து எடுத்துக்கொண்டு பிறகு அரிசியை சற்று சிவப்பாக வறுக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் மாம்பழச் சாறை விட்டு கொதிக்கும் சமயம் வறுத்த அரிசியை சேர்த்து பாத்திரத்தில் அடி பிடிக்காமல் நிதானமாக தீ எரியும்படி வைத்து பக்குவமாய் சாதம் தயாரிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் விட்டு சர்க்கரையைப் போட்டு கெட்டியான பாகு காய்ச்சி சாதம், நெய், பாதாம் பருப்பு, திராட்சை, கற்கண்டு தூள் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.