
தேவையான பொருள்கள்:
வடு - அரை கிலோ
கடுகு - 2 தேக்கரண்டி
எண்ணெய், மிளகாய்ப் பொடி - தலா ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - தேவையான அளவு
உப்பு - முக்கால் ஆழாக்கு
செய்முறை:
மாவடுவை கழுவி, அதனுடன் எண்ணெயை ஊற்றி கலக்கவும், கடுகுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, அதை மாவடுவோடு கலக்க வேண்டும். மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, உப்புத்தூள் ஆகியவற்றை மாவடுவுடன் கலந்து மூடி வைக்க வேண்டும். தினமும் காலையில் ஜாடியைக் குலுக்கிவைத்து அதை ஊறவிட வேண்டும். நன்கு ஊறியவுடன் பயன்படுத்தலாம்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.