பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காய்கறி பணியாரம்

புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, பச்சரிசி ஆகிய மூன்றையும் சுத்தம் செய்து, நன்றாக ஊறவைத்து, அரைக்கவும்.

News image
காய்கறி பணியாரம்
Updated On :26 ஜூலை 2025, 6:35 pm

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி, பச்சரிசி -

தலா அரை கிலோ

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

பச்சை மிளகாய்- 8

பீன்ஸ்- 100 கிராம்

கடலைப் பருப்பு- 50 கிராம்

கேரட்- 200 கிராம்

உளுத்தம் பருப்பு- 100 கிராம்

செய்முறை:

புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, பச்சரிசி ஆகிய மூன்றையும் சுத்தம் செய்து, நன்றாக ஊறவைத்து, அரைக்கவும். அந்த மாவில் உப்பு சேர்த்து, நான்கு மணி நேரம் புளிக்கவிடவும். பின்னர், கேரட் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், பீன்ஸ்களை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடலைப் பருப்பை நன்றாக வறுத்து, அத்துடன் கேரட், பீன்ஸ், மிளகாயை சேர்த்து சிறிது வதக்கி மாவில் கொட்டவும். பின்னர், அடுப்பில் குழிப்பணியார அச்சை வைத்து, குழிகளில் எண்ணெய் தடவி பணியாரங்களாக வார்த்து, இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.