விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ராஜஸ்தானி மாங்காய் ஊறுகாய்

ராஜஸ்தானி மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

Published On :10 ஜூன் 2025, 4:30 pm IST

தேவையான பொருள்கள்:

மாங்காய்- 1 கிலோ

மிளகாய்- கால் கிலோ

வெந்தயம்- 200 கிராம்

மஞ்சள் தூள்- 4 தேக்கரண்டி

பெருங்காய்த் தூள்- 2 தேக்கரண்டி

நல்லெண்ணெய்- முக்கால் கிலோ

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

மிளகாயைக் கிள்ளி வெந்தயத்துடன் வெயிலில் காயவைத்து, மிளகாயை விதையுடன் திப்பி திப்பியாக இடித்து அள்ளி வைக்கவும். வெந்தயத்தை சற்று பெரிய ரவை போல ஒன்றிரண்டாக உடைக்கவும். ஒரு பெரிய தட்டில் மிளகாய் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயத் தூள், மஞ்சள் பொடி, உப்பை தனித்தனியாக வைத்து, கொஞ்சமாகக் கலக்கவும்.

மாங்காயை கழுவித் துடைத்து நான்கு பாகங்களாக முழுவதும் வெட்டுப் படாமல் வெட்டி, கலந்த மசாலா கலவையை ஒவ்வொன்றிலும் நிறைய அடைத்து, ஒரு ஜாடிக்குள் அடுக்கவும். மீதமுள்ள பொடியையும், அதன் மேல் பரவலாகக் கொட்டிவிடவும்.

எண்ணெய் அடுப்பில் புகைய, புகைய சூடேற்றி வைக்கவும். சுமார் 10 அல்லது 12 மணி நேரம் கழித்து, ஜாடியில் ஊற்றி எண்ணெயில் மாங்காய் முழுவதும் மூழ்கியிருக்கும்படி நன்றாகக் கிளறி இறுக்க மூடிவிடவும். ஒரு மாதம் கழித்து உபயோகித்தால், வித்தியாசமான ஊறுகாய் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.