தேவையான பொருள்கள்:
மாங்காய்- 1 கிலோ
மிளகாய்- கால் கிலோ
வெந்தயம்- 200 கிராம்
மஞ்சள் தூள்- 4 தேக்கரண்டி
பெருங்காய்த் தூள்- 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய்- முக்கால் கிலோ
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
மிளகாயைக் கிள்ளி வெந்தயத்துடன் வெயிலில் காயவைத்து, மிளகாயை விதையுடன் திப்பி திப்பியாக இடித்து அள்ளி வைக்கவும். வெந்தயத்தை சற்று பெரிய ரவை போல ஒன்றிரண்டாக உடைக்கவும். ஒரு பெரிய தட்டில் மிளகாய் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயத் தூள், மஞ்சள் பொடி, உப்பை தனித்தனியாக வைத்து, கொஞ்சமாகக் கலக்கவும்.
மாங்காயை கழுவித் துடைத்து நான்கு பாகங்களாக முழுவதும் வெட்டுப் படாமல் வெட்டி, கலந்த மசாலா கலவையை ஒவ்வொன்றிலும் நிறைய அடைத்து, ஒரு ஜாடிக்குள் அடுக்கவும். மீதமுள்ள பொடியையும், அதன் மேல் பரவலாகக் கொட்டிவிடவும்.
எண்ணெய் அடுப்பில் புகைய, புகைய சூடேற்றி வைக்கவும். சுமார் 10 அல்லது 12 மணி நேரம் கழித்து, ஜாடியில் ஊற்றி எண்ணெயில் மாங்காய் முழுவதும் மூழ்கியிருக்கும்படி நன்றாகக் கிளறி இறுக்க மூடிவிடவும். ஒரு மாதம் கழித்து உபயோகித்தால், வித்தியாசமான ஊறுகாய் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



