தேவையான பொருள்கள்:
பச்சரி- 1 கிண்ணம்
வெள்ளை உளுந்து- அரை கிண்ணம்
பெருங்காயத் தூள்- 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
கடுகு- கால் மேசைக்கரண்டி
உடைத்த உளுத்தம் பருப்பு- அரை மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அரிசியை வேகவைத்து, பின்னர் ஆறவைத்து சாதத்தை உதிரியாக்கவும். உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, அரைத்த மசாலா விழுதைச் சேர்க்க வேண்டும். மிதமான தணலில் சிறிது நேரம் வதக்கவும். கறிவேப்பிலையை அரிந்து, சாதத்துடன் மேல் தூவவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



