எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கேசரி, பொங்கல், அல்வா செய்யும்போது... டிப்ஸ்!

பால் பாயசம் செய்யும் போது கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்க விட்டுச் செய்தால், பாயசம் மிகவும் சுவையாக இருக்கும்.

News image
Updated On :24 ஜனவரி 2026, 10:30 pm

ஆர். ஜெயலட்சுமி

பால் பாயசம் செய்யும் போது கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்க விட்டுச் செய்தால், பாயசம் மிகவும் சுவையாக இருக்கும்.

பஜ்ஜி மாவுடன் ஒரு வெங்காயம், மூன்று பூண்டு பற்கள், சிறிது சோம்பு முதலியவற்றைப் போட்டு அரைத்துக் கலந்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.

இட்லிப் பொடி செய்யும்போது சிறிது கறிவேப்பிலையும் போட்டு மிக்ஸியில் பொடித்தால், பொடி ருசியாக இருக்கும்.

கேசரி, பொங்கல், அல்வா ஆகியவற்றைக் கெட்டியான பிறகு இறக்கக்கூடாது. கொஞ்சம் முன்னதாகவே இறக்கவேண்டும். ஆறிய பின்பு அவை சரியான பதத்துக்கு வந்து விடும்.

இரண்டு வாழைப்பழத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து, அதனுடன் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து ஏதாவது ஒரு பழஎசன்ஸ் ஊற்றிக் காய்ச்சினால் புதிய வகை பாயசம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.