பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பொங்கல் ருசியாக இருக்க... வீட்டு சமையல் குறிப்புகள்!

எளிய வீட்டு சமையல் குறிப்புகள்...

News image

மாம்பழச் சாறு பொங்கல்

Updated On :14 ஜூன் 2026, 4:05 am IST

ஜவ்வரிசியை சாதம் போல் வேக வைத்து, மோரில் கரைத்து உப்புப் போட்டு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றுவலியும் இருக்காது.

தேங்காய்ச் சாதம் செய்யும்போது, அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப் பொடி செய்து கலந்தால், சாதம் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

அரிசியையும், பருப்பையும் கலந்து வாசனை வரும் வரை வறுத்துக் களைந்துவிட்டு வெண்பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்தால் விரைவில் வெந்துவிடும். மணமும் தூக்கலாக இருக்கும்.

-அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

பச்சைப்பயறு ஊட்டச்சத்து மிக்க உணவாகும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தொடர்ந்து பச்சைப் பயறை உணவில் சேர்த்தால், ஊட்டச்சத்துகளைப் பெறமுடியும்.

பயத்தமாவுடன் உளுந்து மாவைச் சேர்த்து, தலைமுடியை அலசினால் பொடுகு பிரச்னைகளும் தீரும். முடியும் நன்கு வளரும்.

பயத்தம் பருப்பை வேக வைத்து உண்பது நோயாளிகளுக்கும், வலுவற்றவர்களுக்கும் நல்லது.

பாலையும் பழங்களையும் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. நெய், தேன் இரண்டையும் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. மருந்து உள்கொள்ளும்போது, அகத்திக்கீரையைச் சாப்பிடக் கூடாது.

வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி தயிர், வெல்லம் கலந்து சாப்பிட்டு வர தொண்டை வலி நீங்கும். வெங்காயச்சாற்றை நீராகாரத்துடன் சேர்த்துக் குடித்தால், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயச் சாற்றை மோருடன் கலக்கிக் குடித்து வர இருமல் குணமாகும்.

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.