சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சமையல் டிப்ஸ்...

கீரை, முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கு போன்றவற்றில் உள்ள சத்து வீணாகாமல் இருக்க வேண்டுமென்றால், தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னரே அவற்றை வேக வைக்க வேண்டும்.

News image

கொத்துமல்லி

Updated On :28 மார்ச் 2026, 10:31 pm

கீரை, முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கு போன்றவற்றில் உள்ள சத்து வீணாகாமல் இருக்க வேண்டுமென்றால், தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னரே அவற்றை வேக வைக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது, அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித்தயிர் ஊற்றி வதக்கினால் கறி மிக ருசியாக இருக்கும்.

கடலைப்பருப்புடன், வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்து போளி செய்தால் அதன் சுவையே அலாதி தான்.

ஈரமான காய்கறிகளை ஒரு பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் அவை சீக்கிரமாக அழுகிப்போகாது.

கொத்துமல்லித்தழையை ரசத்தில் போட்டு விட்டு அதன் தண்டை வீணாக்காமல் காய வைத்து, ரசப்பொடியில் சேர்த்து அரைக்கவும். வாசனையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.