சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது, முதலில் சிறிது கடலை மாவை எண்ணெய்யில் வறுத்துவிட்டு கிழங்கைப் போட்டால், ரோஸ்ட் மொறுமொறுவென்று இருக்கும்.
நூடுல்ஸ் மிகுந்து விட்டால், அதனுடன் கடலைமாவும், அரிசி மாவும் சம அளவு சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் கொஞ்சம் கலந்து, பக்கோடா பதத்துக்குப் பிசைந்து, எண்ணெய்யில் பொரித்தெடுங்கள். சுவை மிகுந்த நூடுல்ஸ் பக்கோடா தயார்.
வெயில்காலத்தில் மோர் விரைவில் புளிக்காமல் இருக்க, வாழை இலையை சிறு சிறு துண்டுகளாக்கி மோரில் போட்டு வைத்து, மோரை உபயோகிக்கும்போது எடுத்து விட வேண்டும்.
முருங்கைக்கீரை, அகத்திக் கீரையை வதக்கும் போது, கரண்டியின் காம்புப்பகுதியை வைத்துக் கிளறவும். அப்படிக் கிளறினால் கட்டி விழாமல் கீரை உதிரி உதிரியாக இருக்கும்.
மோர்க்குழம்பு செய்யும்போது பொங்கிப் பொங்கி வழிந்தால், கவலை வேண்டாம். ஒரு உருளைக் கிழங்கை எடுத்து தோல் சீவி, துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். இந்தத் துண்டுகளைப் போட்டால் மோர்க் குழம்பு பொங்குவது நின்றுவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீட்டுக் குறிப்புகள்...
வத்தக்குழம்பு சுவை அதிகரிக்க...

கோடையில் சரும பாதுகாப்பு...
சமையல் டிப்ஸ்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
