சிறுவர் பாடல்: பூனையிடம் வேண்டுகோள்!
சின்னச் சின்னப் பூனையே செல்லக் குட்டிப் பூனையே அறையை விட்டு வராதே அடுத்தவர் கண்ணில் படாதே! அந்தக் குவளையில் பாலுண்டு இந்தக் கிண்ணத்தில் சோறுண்டு வேண்டும் போது எடுத்துண்பாய் வெளியே மட்டும் வராதே! கட்டி


சின்னச் சின்னப் பூனையே
செல்லக் குட்டிப் பூனையே
அறையை விட்டு வராதே
அடுத்தவர் கண்ணில் படாதே!
அந்தக் குவளையில் பாலுண்டு
இந்தக் கிண்ணத்தில் சோறுண்டு
வேண்டும் போது எடுத்துண்பாய்
வெளியே மட்டும் வராதே!
கட்டில் அடியே இடமுண்டு
புரண்டு படுக்கத் துணியுண்டு
உருட்டி ஆட பந்துண்டு
ஓடாமல் உலவ அறையுண்டு!
பள்ளிக்குக் கிளம்பணும் தெரிகிறதா
மாலைதான் வருவேன் புரிகிறதா
சொன்னது எதையும் மறக்காதே
தொல்லையில் சிக்கித் தவிக்காதே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...