பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

புதிய பாடல்: மழலை யேசு பிறந்தாரே!

அவரே அன்பின் அடையாளம் அன்னை மரியின் கொடையாகும் புவியே போற்றும் பரிசுத்தன் புண்ணியன் யேசு வரவாகும்! எளியோர்க் கிரங்கும் இறையாகும் எருசலேம் கண்ட ஒளியாகும் வளமே அவரின் வரமாகும் வாசனைப் பூவின் எழிலாகும்!

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:47 am

செ. சு. மலரடியான்

அவரே அன்பின் அடையாளம்

அன்னை மரியின் கொடையாகும்

புவியே போற்றும் பரிசுத்தன்

புண்ணியன் யேசு வரவாகும்!

எளியோர்க் கிரங்கும் இறையாகும்

எருசலேம் கண்ட ஒளியாகும்

வளமே அவரின் வரமாகும்

வாசனைப் பூவின் எழிலாகும்!

மாட்டுத் தொழுவக் குடிலினிலே

மன்னன் யேசு மழலையென

நாட்டில் அன்பே நடைபெறவே

நாயகம் பிறந்தார் எளிமையிலே!

வானவர் தூதன் வந்தாரே

வள்ளல் அருளைத் தந்தாரே

ஞானமும் வழியாய் நின்றாரே

நன்மை பெருகிட அன்பாலே!

மார்கழிப் பனியின் நாளினிலே

மலர்ந்த மரிமகன் தோளினிலே

சேர்ந்த ஆட்டுச் சேயெனவே

சேவித் திடுவோம் நேயனையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.