ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

முத்துக் கதை

இந்த மனிதர்கள் களவாடிச் சென்று விட்டனர்.

News image
Updated On :30 நவம்பர் 2012, 4:06 pm IST

 இருந்தாலும்
 இறந்தாலும்...

தோப்பு ஒன்றில் ஒரு மரக்கிளையைச் சுற்றி தேனீக்கள் மிகுதியான ஓசையுடன் விவாதம் செய்து கொண்டிருந்தன. சப்தம் கேட்டு, அங்கு பறந்து வந்த நாட்டாமை தேனீ, ""இங்கே என்ன கூச்சல்? எதற்காக இந்த ஆரவாரம்?'' என்று கேட்டது.
 மேலும், சப்தம் போடாமல் என்ன செய்தி என்பதைச் சொல்லுங்கள் என்று உத்தரவு பிறப்பித்தது.
 அப்போது தைரியமான தேனீ ஒன்று முன்வந்து, ""நாங்கள் துளித் துளியாகச் சேகரித்த தேனை, நம் இனத்தை நெருப்பிலிட்டுப் பொசுக்கிவிட்டு, இந்த மனிதர்கள் களவாடிச் சென்று விட்டனர்.
 இதைத் தட்டிக் கேட்க ஆளில்லையா? இதைப் பற்றித்தான் விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்'' என்று கூறியது.
 அந்தத் தேனீக்களைப் பார்த்து, நாட்டாமை தேனீ கூறியது-
 ""நாம் அழிந்தாலும் பரவாயில்லை. நாம் சேகரித்த தேன் மக்களுக்கு மருந்தாக உதவி அவர்களின் உயிரைக் காப்பாற்றுகிறது. இருந்தாலும் இறந்தாலும் நம் உழைப்பு பிறருக்குப் பயன்பட வேண்டும். நாம் பயன்படுகிறோம் என்பதில் பெருமைப்படுங்கள்'' என்று சொல்லிவிட்டு விர்ரென்று பறந்து போய் விட்டது.
 -கோ.தமிழரசன், செஞ்சி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.