/

துள்ளிச் செல்வோம் பள்ளி...

 குருத்தாய் வளரும் பிள்ளைகளுக்கு கருத்தாய் பாடம்கூறும் பள்ளி

News image
Updated On :21 ஜூன் 2013, 2:47 pm IST

 குருத்தாய் வளரும் பிள்ளைகளுக்கு
 கருத்தாய் பாடம்கூறும் பள்ளி
 இருட்டில் வாடும் ஏழைக்குழந்தைகள்
 ஏற்றம்அடைய ஏணியாம் பள்ளி
 
 ஒழுக்கம் என்றும் உயர்வு தருமெனும்
 உயர்மொழி நாளும் ஓதும் பள்ளி
 எழுகதிர் வெளிச்சம் பரவுதல் போல
 அறிவில் ஒளியைப் பாய்ச்சும் பள்ளி
 
 தமிழ்த்தாய் வாழ்த்தை அமிழ்தாய்க் கூறி
 தாய்மொழிச் சிறப்பை உணர்த்தும் பள்ளி
 இமையாய் இந்திய நாட்டைக் காக்க
 எழுச்சிக் கீதம் இசைக்கும் பள்ளி
 
 தள்ளியே நின்று கல்வியை மறந்தால்
 தன்நிழல் கூட தனியே விலகும்
 துள்ளியே நீயும் பள்ளி சென்றால்
 உன்கை அருகே உலகம் சுழலும்!

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.