மே 1 - உழைப்பாளர் தினம் பொன்மொழிகள்

தெருவில் குப்பை கூட்டுகிறவன், அரியணை அமர்ந்து அரசு புரியும் மன்னனைப் போன்ற பெருமையும் சிறப்பையும் உடையவன். - விவேகானந்தர்
மே 1 - உழைப்பாளர் தினம் பொன்மொழிகள்
Updated on
1 min read

1. தெருவில் குப்பை கூட்டுகிறவன், அரியணை அமர்ந்து அரசு புரியும் மன்னனைப் போன்ற பெருமையும் சிறப்பையும் உடையவன். - விவேகானந்தர்
 

2. தமது உழைப்பின் மூலம் வாழ்க்கைக்குரிய வழியைத் தேடிக் கொள்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. எனவே, ஒரு வழக்கறிஞர் வேலைக்கு எவ்வளவு மதிப்பு உண்டோ அவ்வளவு மதிப்பு ஒரு நாவிதனின் வேலைக்கும் உண்டு.
- காந்தியடிகள்
 

3. மனிதன் கட்டை வண்டி இழுக்கும்போது அவனுடைய கைகால்களின் தசைநார்களைப் பார்த்தாலும் அழகாக இருக்கிறது. - மு.வரதராசனார்
 

4. கெட்ட நெறிக்குச் சோம்பலே காரணம். நன்மையை நாடுகின்றவன் ஒரு தொழிலைக் கற்று அதில் புகுந்து பணியாற்ற வேண்டும். - அக்பர்
 

5. ஆராய்ச்சியின்றி உழைப்பவனுக்கு ஆண்டவன் அருள் சுரப்பான். - காந்தியடிகள்
-தொகுப்பு: ந.கிருஷ்ணவேலு
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com