
* தேசியக்கொடி வணக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
* தேசியக்கொடியை சூரியோதயத்தின்போது பறக்கவிட்டு, சூரியன் மறையும் நேரத்தில் இறக்க வேண்டும்.
* தேசியக்கொடியைக் கொடிக்கம்பத்தில் ஏற்றும்போது அதிவேகமாக செயல்பட வேண்டும்.
* கொடியை இறக்கும்போது நிதானமாக செயல்பட வேண்டும்.
* வீடுகளின் பால்கனிகள், கட்டிட வராந்தாக்கள் போன்றவற்றிலிருந்து பறக்க விடும்போது கொடிக்கம்பத்தின் நுனியில் காவி நிறம் இருக்க வேண்டும்.
* சிலைகள், நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றைத் திறந்துவைக்கும்போது தேசியக்கொடியை முதலில் பறக்கவிட வேண்டும்.
* சிலைகளை தேசியக்கொடியால் மூடக்கூடாது.
* தேசியக்கொடியை கம்பத்திலிருந்து கீழே இறக்கிய பின்பு "சல்யூட்' செய்யக்கூடாது.
* சவப்பெட்டிகளில் உபயோகிக்கும்போது சடலத்தின் தலைபாகத்தில் காவி நிறம் அமைய வேண்டும்.
* விளம்பரங்களுக்கு தேசியக்கொடியை பயன்படுத்தக்கூடாது.
* மிகவும் அழுக்கடைந்த, கிழிந்த, நைந்து போன கொடிகளைத் தீயிலிட்டு சாம்பலாக்கிவிட வேண்டும்.
* சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் காந்தி ஜெயந்தி தினங்களில் கொடியை எங்கும் பறக்கவிடலாம்.
* பிறநாட்டுக் கொடிகளுடன் நமது கொடியை பறக்க விடும்போது வலப்புறம் ஓரத்தில் இருக்குமாறு செய்ய வேண்டும.
* வேற்று நாட்டுக் கொடிகளை வரிசையமைப்பில் அகரவரிசைப்படி பறக்கவிடவேண்டும்.
* ஒரு கம்பத்தில் இரண்டு கொடிகளைப் பறக்கவிடக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.