இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

அறிஞர்களின் பொன்மொழிகள்

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை. -ஹெலன் கெல்லர். 

News image
Updated On :10 ஜனவரி 2014, 2:46 pm IST

1. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.
 -ஹெலன் கெல்லர்.
 
2. நாம் செய்யும் சேவை கடலின் ஒரு துளி போன்றதுதான். ஆனால் அதை நாம் செய்யாவிட்டால் கடலில் ஒரு துளி குறைந்துவிடும் அல்லவா?
 -அன்னை தெரசா.
 
3. மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடையமுடியும்.
 -அம்பேத்கர்.

4. வீரன் ஒரு முறைதான் சாகிறான். கோழை ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டேயிருக்கிறான்.
 -ஷேக்ஸ்பியர்.
 
5. கல்வியின் வேரானது கசக்கும். ஆனால் அதன் விளைச்சல் இனிக்கும்.
 -அரிஸ்டாட்டில்.

6. சோம்பல் மாவீரனையும் வீழ்த்திவிடும்.
 - பார்ட்டன்.
 
7. பழிவாங்குதல் வீரமன்று. ஆனால் பொறுப்பதே வீரம்.
 - ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
 
8. ஊக்கத்தைக் கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு.
 -அண்ணா.
 
9. கோபத்தைக் கொன்று விடு. இல்லையேல் அது உன்னைக் கொன்றுவிடும்.
 -குருநானக்.
 
10. உயர்ந்த எண்ணங்களை உடையார் ஒரு நாளும் துன்பம் அடையார்.
 - காந்தியடிகள்.
 
 தொகுப்பு :
 ரா.ராம்பிரசன்னா, அரக்கோணம்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.