/

கல்லெறிந்த சிறுவன்!

நாகர்கோயிலுக்கு அருகில் உள்ள ஒழுகினசேரி என்னும் கிராமத்தில் ஒரு சிறுவன் கல்லெறிந்து விளையாடிக்கொண்டிருந்தான்.

News image
Updated On :8 ஏப்ரல் 2016, 10:44 am

நெ. இராமன்

நாகர்கோயிலுக்கு அருகில் உள்ள ஒழுகினசேரி என்னும் கிராமத்தில் ஒரு சிறுவன் கல்லெறிந்து விளையாடிக்கொண்டிருந்தான். அவன் எறிந்த கல் தெருவில் நடத்துகொண்டிருந்த சந்நியாசி ஒருவர் மீது பட்டுவிட்டது! அவர் தலையில் ரத்தம் வழிந்தது! அதைப் பார்த்த சிறுவன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான். சந்நியாசி சிறுவனின் அருகில் வந்து, ""இப்போது உன் மனம் நீ செய்த தவறுக்காக வருந்துகிறது..., அது போதும். இனி யார் மீதும் கல்லெறிய மாட்டாய் என்பதை உன் முகம் காட்டுகிறது. எல்லோருக்கும் நல்லவனாக, உதவி செய்பவனாக நீ புகழ் பெற்று வாழ்வாய்'' என்று அன்பு ததும்பக் கூறினார்.

அந்த விளையாட்டுச் சிறுவன் வேறு யாருமில்லை. நகைச்சுவை மன்னர், "கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்' தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.