அரங்கம்: பூச்செடித் தேனடை
தந்தை: தேனரசு, நீதான் நம்ம பேட்டை நலச்சங்கம் நடத்துற பூச்செடி வளர்ப்புப் போட்டியிலே கலந்துக்கிட்டிருக்கே...,நாலு மாசமா இந்தச் செடியைக் கண்ணும் கருத்துமா வளர்க்கிறே... நிறைய மொட்டுகளும் வந்திருக்கு...,பூக்கற சமயம்! ஆடு, மாடு உள்ளே நுழைஞ்சுடாம பாத்துக்கணும்!








