/

மரங்களே வரங்கள்!

மரங்கள் எத்தனை வகையாகும்! - அவைமாபெரும் உலகுக்கு வரமாகும்!

News image
Updated On :23 டிசம்பர் 2017, 6:46 am

ரமண ராஜசேகர்

மரங்கள் எத்தனை வகையாகும்! - அவை
மாபெரும் உலகுக்கு வரமாகும்!
இறைவனின் படைப்பில் உன்னதமாம்! - அது
இயற்கை வளம் தரும் அற்புதமாம்!

உலகத்தில் மரங்கள் பலகோடி! - அவை 
உயிர்களின் வளர்ச்சிக்கு உயிர்நாடி!
அழகாய் பெரிதாய் வளர்ந்திடுமே!
அது பறவைகள் வாழ்ந்திட இடம் தருமே!

மரங்களின் அழகே கிளைகள்தான்! -அவை
மனதினை மயக்கிடும் சிலைகள்தான்!
கரங்கள் போன்றே விரிந்திருக்கும்! - அதில்
இலையுடன் மலர்கள் பூத்திருக்கும்!

காய், கனி தருவதும் மரங்கள்தான்! - இதைக்
காத்திட நாம் மறக்கலாமோ! 
தாய்போல் நேசிக்க வேண்டுமடா! - மரம்
சுவாசக் காற்றைத் தூண்டுமடா!

தாவரம் உலகுக்கு ஆதாரம்! - இதை
தருகின்ற மரங்களோ தாயாகும்!
யாவரும் பசுமையைக் காப்போமே! - நாம் 
இறைவனின் வரத்தைப் பெறுவோமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.