டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அறுவடைத் திருநாள்!

காளையும் உழவரும் கழனியில் உழைத்து 

News image
Updated On :26 ஜனவரி 2018, 6:30 pm

தளவை இளங்குமரன்

காளையும் உழவரும் 
கழனியில் உழைத்து 
வேளையில் தெளிக்கும்
விதையினம் முளைக்கும்!

வேருடன் களைகளை 
வெட்டி அழித்து 
நீருரம் செலுத்தி
நிறைகதிர் விளைக்கும்!

சீருடன் விளைத்த
செந்நெல் அறுத்துப்
பாரினை வருத்தும்
பசிப்பிணி துரத்தும்!

மேழியின் சிறப்பை
மேதினிக் குரைக்கும்
வாழையும் கரும்பும் 
வாசலில் சிரிக்கும்!

காலையில் கிழக்கில்
கதிரவன் உதிக்கப்
பாலுடன் பொங்கல்
பானையில் கொதிக்கும்!

ஆதவன் நமக்கு
அளித்திடும் நலத்தை
பூதலம் மதித்துப் 
புகழ்படத் துதிக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.