காஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள்
செல்வாக்கு படைத்தவர்கள் அடிமட்டத்திலுள்ளவர்களின் நிலைமையை மேம்படுத்த தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.


செல்வாக்கு படைத்தவர்கள் அடிமட்டத்திலுள்ளவர்களின் நிலைமையை மேம்படுத்த தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.
ஒரு சிறு புல்லைக்கூட மனிதன் படைக்க இயலாது. நாம் உண்ணும் உணவையும், உடுக்கும் உடையையும் முதலில் ஆண்டவனுக்கு நிவேதனம் செய்யாவிடில் மிகவும் கீழ்த்தரமான செய்நன்றி மறத்தல் என்னும் குற்றத்திற்கு ஆளாவோம்.
அன்பற்ற வாழ்க்கை பாழானது. எல்லோரிடமும், எல்லா விலங்குகளிடமும், பறவைகளிடமும் அன்பு செலுத்துவதை ஒவ்வொருவரும் பேணி வளர்க்க வேண்டும்.
பாராட்டத்தக்க ஒரு பணியைச் செய்தவன் அதற்காக மற்றவர்கள் அவனைப் புகழ்வதை விரும்பிக் கேட்டாலோ, அல்லது தானே அதைப்பற்றி புகழ்ந்து கொண்டாலோ, அப்பணியால் அவனுக்குக் கிடைக்கும் சிறப்பை இழந்து விடுவான்.
நடந்து விட்டதைப் பற்றி துயரப்பட்டுக் கொண்டிருப்பதில் ஒரு நன்மையும் இல்லை. நன்மைக்கும், தீமைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள நாம் கற்றுக்கொண்டு விட்டால், நாம் மீண்டும் தீய வழியில் செல்லாமல் அது நம்மைக் காக்கும்.
நம் வாழ்நாட்களை நல்ல குறிக்கோளுக்காகப் பயன்படுத்த வேண்டும்.
பக்தி வர வேண்டுமானால் சாந்தம் வரவேண்டும்.
சாப்பிடுபவனைவிட, சாப்பாடு அளித்தவனுக்குத்தான் அதிக ஆனந்தம் இருக்கும்.
தேவைகள் அதிகரித்துக்கொண்டே போனால், அதற்கேற்பப் பிரச்னை
களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...