படைக்கும் சக்தி ஒவ்வொரு மனிதனிடத்திலும் மறைந்து கிடக்கிறது. அதில் கால் பகுதியாவது உபயோகித்தால் போதும். நிச்சயம் வெற்றியே.
- ஆஸ்கார் ஒயில்டு.
முகஸ்துதி என்பது வண்ணம் பூசப்பட்ட படைக்கலன் போன்றது. காட்சிப் பொருளாகத்தான் அது பயன்படும். காரியத்திற்கு உதவாது.
- சாக்ரடீஸ்
அதிர்ஷட்டத்தைவிட தன்னம்பிக்கை அதிக சாதனைகளைச் செய்யும்!
- புரூஸ் பர்த்தட்டன்
பணிவு உன்னையும் அறியாமல் உன்னை உயர்த்திக்கொண்டிருக்கும்.
- லா ரோஷ்புக்கோ
தியாகியாக வாழ அதிக வல்லமை வேண்டும்.
- ஒரேகமான்
வெறுப்பை சகித்துக்கொள்வதைவிட, எள்ளி நகையாடுவதை சகித்துக்கொள்வது கடினமானது.
- ஸிட்னிஸ்டித்
நல்லெண்ணம் எல்லாப் புண்களையும் ஆற்றும்.
- பிரான்சிஸ் பேக்கன்
சிறிய துயரங்கள் குரல் கொடுத்து முறையிடும். ஆழ்ந்த வருத்தங்களோ ஊமைகளாய் இருக்கும்.
- செனேகா
சட்டங்களே இல்லாதபோதும் நல்ல மனிதர்கள் நல் வாழ்க்கையைத்தான் நடத்துவார்கள்.
-அரிஸ்டோஃபனிஸ்
சொல்ல வேண்டியதைச் சொல்வது முக்கியம். அதிலும் அதை எப்படிச் சொல்வது என்பது அதைவிட முக்கியம்.