‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

தோகை மயில்!

அழகு மயிலின் ஓசை தன்னை அகவல் என்று கூறுவர்!

News image
Updated On :15 பிப்ரவரி 2020, 4:50 pm IST


அழகு மயிலின் ஓசை தன்னை 
அகவல் என்று கூறுவர்!
பழகு தமிழில் புலவர்களின் 
பாடல் ஒன்று அகவல்தான்
குளிரும் காற்று வீசும் போது 
தோகை விரிக்கும் மாமயில்!
ஒளிருகின்ற புள்ளிக் கோலம் 
உடலில் உண்டு இயற்கையாய்!
ஆடுகின்ற வண்ணத் தோகை 
ஆண் மயில்தான் பெற்றது
காடு போன்ற சோலைகளில் 
காணலாமே மயில்களை!
வாடைக் காற்றில் ஆடும் மயிலை
வருந்துவதாய் எண்ணியே 
ஆடை ஒன்று போர்த்தியுள்ளான் 
அன்று வள்ளல் பேகனும்!
ஆறு படையில் வீடு கொண்ட 
ஆறுமுக வேலவன் 
ஏறுகின்ற ஊர்தி என்று 
எழுதி வைத்தார் ஏட்டிலே!
பட்டுத் தோகைச் சிறகில் ஒன்றைப் 
புத்தகத்தில் வைப்பதால் 
குட்டி போடும் என்று நம்பும் 
குழந்தை மனம் வேடிக்கை!

- சி.விநாயகமூர்த்தி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.