இந்தியா
இன்றைய செய்திகள்! நேரலை
இன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் ஒரே இடத்தில் அறிந்துகொள்ள.. இணைந்திருங்கள் தினமணி.காம் உடன்!
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
மகாராஷ்டிரம்: புலி தாக்கியதில் 4 பெண்கள் பலி!
மகாராஷ்டிர மாநிலம், சந்திரபூரில் பீடி இலை என்று அழைக்கப்படும் தெண்டு இலைகளைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, புலி தாக்கியதில் நான்கு பெண்கள் பலியானதாக வனத்துறை அதிகாரி ஒருவர், வெள்ளிக்கிழமை (மே 22) காலை தெரிவித்தார்.
இனி வரும் தேர்தல்களில் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டி: ஜவாஹிருல்லா
இனிவரும் காலங்களில் சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களில் சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவதாக மனிதநேய மக்கள் கட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்
கேரள பேரவைத் தலைவர்
கேரள சட்டப்பேரவைத் தலைவருக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240-க்கு விற்பனையாகிறது.
அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
அரசு விவகாரங்களில் மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் தலையிடக் கூடாது என தவெகவினருக்கு கட்சி பொதுச் செயலர் என். ஆனந்த் அறிவுறுத்தல்
முதல்வர் விஜய் தில்லி பயணம்?
தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக நாளை(மே 23) தில்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவை இடைத்தேர்தல்
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு
சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் வெள்ளிக்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
வன்னி அரசு, ஷாஜகான் பதவியேற்பு
விசிக எம்எல்ஏ வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
வன்னி அரசுக்கு சமூக நீதித் துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் ஆலோசகர்கள்
முதல்வர் ஜோசப் சி. விஜய்யின் ஆலோகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4.5 மணிநேர ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் போர்ச்சூழல், எரிபொருள் தட்டுப்பாடு உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளும், விரைவான சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
முதல் பெண் காவலா் மறைவு
தமிழக காவல்துறை வரலாற்றில் தடம் பதித்த முதல் பெண் காவலரான சிசிலி (82), உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை (மே 21) காலமானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.













