தமிழ்த் தாத்தா!
சாமிநாதன் என்றோர் தாத்தாசெய்த சாதனைகள்தனைக் கேட்பீர்பழைமை மிக்கப் பலநூல் அன்று


சாமிநாதன் என்றோர் தாத்தா
செய்த சாதனைகள்தனைக் கேட்பீர்
பழைமை மிக்கப் பலநூல் அன்று
புலவர் ஓலைச் சுவடியாய்த் தந்தார்!
ஓலைச் சுவடியில் இருந்த நூலின்
உயர்வை அறியார் இருந்ததாலே
வீட்டுப் பரண்மேல் வைத்தார் அவற்றை
வேண்டாப் பொருளை வைத்தல் போலே!
ஆண்டு பலவும் ஓடிப் போனதே
அவற்றைக் கரையான் அரிக்கலானதே
பலப் பல ஊரிலும் பழைய சுவடிகள்
பரண்மேல் இதுபோல் பாழாய் ஆனவே!
அறிந்தார் இதனை நம் சாமிநாதன்
விரைந்தார் சுவடிகள் தேடும் பணியில்!
பகலும் இரவும் பாராமலே அவர்
பல ஊர் சென்றார் சுவடிகள் கேட்டு!
பலப்பல சுவடிகள் கரையான் அரித்ததில்
பொலபொல என்றே போனது கண்டார்!
சேர்த்த சுவடிகள் சீர்பட ஆக்கி
செப்பம் செய்து நூலுருச் செய்தார்!
செந்தமிழ் உயிர்போல் சிறந்து நின்ற
சங்க இலக்கியம் காத்ததாலே
சாமிநாதன் பட்டங்கள் பெற்றார்!
"தமிழ்த் தாத்தா' எனப் புகழினைப் பெற்றார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...