தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாரதியார் பொன்மொழிகள்!

எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவை எண்ணல் வேண்டும்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவை எண்ணல் வேண்டும்.

மனிதன் சோறு உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் செய்ய மறக்கக்கூடாது!

பிறரை ஏமாற்றாமல் இருந்தாலே போதும்.  தெய்வ அருளுக்குப் பாத்திரமாகி விடுவோம்!

கவலையும், பயமும் எனக்குப் பகைவர்கள். நான் இப்பகைவர்களை வென்று தீர்த்தேன். அதனால் மரணத்தை வென்றேன். 

இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை!

எவனையும் வெற்றுக் காகிதம் என ஒருபோதும் எண்ணாதே. ஒருநாள் அவன் பட்டமாய்ப் பறப்பான். நீயும் அவனை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும்.

பொய் சொல்லக்கூடாது பாப்பா! என்றும் புறம் சொல்லலாகாது பாப்பா! தெய்வம் நமக்குத் துணை பாப்பா! ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா!

ஏதும் அறியாமலிருப்பது அறியாமை இல்லை. கண்டதெற்கெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு, காலத்தையும், வாழ்வையும் வீணாக்குவதுதான் அறியாமை!

பயமின்றி உழையுங்கள்! சலிப்புக்கு ஒரு போதும் இடங்கொடாதீர்கள்.

கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.