ஊழ்
அறத்துப்பால் - அதிகாரம் 38 - பாடல் 8
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
உணவு உடை தங்குமிடம்
போன்ற வாழ்வின் தேவைகள்
நுகர்ந்திடாமல் வருந்துவோர்
துறவைக்கூட விரும்புவர்
துறவில் கூட துன்பங்கள்
இருப்பதனால் துறவினை
விரும்பிடாமல் வாழ்வினில்
வருவதை நுகர்ந்து வாழ்கிறார்.