காலைச் சூரியனே! உலகின்
கண்ணைத் திறப்பவனே!
மூலை முடுக்கெல்லாம்- இன்ப
மகிழ்ச்சி விரிப்பவனே!
நேற்று மாலையிலே- மிதக்கும்
நட்பு மேகமதில்
மேற்கே நீ மறைந்தாய் - இன்று
முளைத்தாய் நேர்கிழக்கே
எங்குச் சென்றிருந்தாய்- இரவில்
என்ன செய்திருந்தாய்?
தங்கிப் பால் குடித்து- சற்று
தூங்கி வந்தாயா?
அம்மா அழைத்தாரா? உனது
அன்பர் இழுத்தாரா?
சும்மா படுத்திருந்து - கனவு
சுகமும் பெற்றாயா?
நிலவாம் மகளுக்காய்- கண்ணா
மூச்சு ஆட்டத்தில்
தலையை மறைத்தொளித்து- பிறகு
தோன்றி மகிழ்ந்தாயா?