அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

தமிழ்த் தாயும் நம் அன்னை!

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

பிள்ளைக் குலமே! பிள்ளைக் குலமே!

பெற்ற தாயின் பெருமை அறிவீர்!

உள்ளம் அள்ளும் உயர்ந்த மொழியாம்!

அமுதத் தமிழும் அன்னை உணர்வீர்!

தாயை மறத்தல் தீதென் றறிவீர்!

தமிழை விடலும் தீதே உணர்வீர்!

சேயாய்த் தொட்டில் தாலாட்டு கேட்டீர்!

செந்த மிழ்த்தாய் சந்தம் இரசித்தீர்!

நமது தமிழில் நாலு முண்டு

நாடி வாழ நல்ல னவுண்டு!

சுமைகள் மறக்கச் செம்பா வுண்டு!

சுகமாய் வாழச் செந்நெ றியுண்டு!

வெல்லம் என்றால் நா இனியாது!

வாடை என்றால் உடல் குளிராது!

நல்ல சுவைகள் நிறைந்த தமிழை

நாளும் கற்கின் நாவிற் கினிதே!

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.