உழைத்தால் நீயும் உயர்வாயென
உழைத்து நானும் சொல்வேனே
-
தழைபோல் வளர்ந்து செழித்திடவே
மழைபோல் நீயும் வாழ்ந்திட வேணும்
-
குழையும் நட்பில் உறவுகளும்
மகிழ்ந்து உன்னை வாழ்த்திட வேணும்
-
வேழம் போல் வீரம் கொண்டு
கெட்ட தனைத்தும் அழித்திட வேணும்
-
சூழும் உலகில் நீதான் என்றும்
சூதுகள் அழித்து வென்றிட வேணும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.