எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பரோட்டா செய்வது எப்படி?

மதுரையில் பரோட்டா தயாரிப்பு பயிற்சிப் பள்ளி அறிமுகம்

News image
Updated On :18 மே 2024, 8:44 pm IST

ருசியான பரோட்டாவை தயாரிப்பது குறித்து மதுரையில் பயிற்சிப் பள்ளி உருவாகி இருக்கிறது.

மதுரை கூடல் நகரைச் சேர்ந்த முப்பத்து இரண்டு வயதான முகமது காசிம், கடந்த மூன்று ஆண்டுகளாகப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார்.

அவருடன் பேசியபோது

'எனது தாத்தா காலத்தில் இருந்து எங்களுக்கு ஹோட்டல் தொழில்தான். நான் படிப்பை முடித்துவிட்டு, மாலத்தீவு, துபையில் ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். சொந்த ஊரிலேயே சொந்தமாக ஓட்டல் நடத்தலாமே? என்ற எண்ணம் ஏற்பட்டு 2019-ஆம் ஆண்டில் மதுரைக்குத் திரும்பினேன்.

நான் பரோட்டா தயாரிக்கப் போய்விட்டால் ஹோட்டலின் மற்ற விஷயங்களையும், நிர்வாகத்தையும் என்னால் எப்படி கவனிக்க முடியும் என்ற கேள்வி எனக்கு எழுந்தது.

தினம் ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதற்கு நான் தயாராக இருந்தாலும், பரோட்டா செய்ய யாரும் கிடைக்கவில்லை. ஆள்கள் கிடைக்காத சூழ்நிலையில் 'பரோட்டா செய்வது எப்படி?' என்று சொல்லிக் கொடுக்கும் பயிற்சிப் பள்ளியை ஆரம்பிக்க முடிவு செய்தேன்.

பரோட்டா மாஸ்டராக ஒரு மாஸ்டரிடம் சில ஆண்டுகளாவது வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையில், பத்தே நாள்களில் பயிற்சி தருகிறோம் என்று முதலில் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து பல பகுதிகளிலும் சுவர்களில் ஒட்டியபோது, சிலர் கிண்டல் செய்தனர். ஆனாலும், நான் மனம் தளரவில்லை.

சில நாள்கள் கழித்து இரண்டு உள்ளூர்க்காரர்கள் வந்தனர். அவர்களுக்கு எங்கள் ஹோட்டலிலேயே வைத்து பயிற்சி கொடுத்தேன். பிரத்யேகமாக ஒரு பயிற்சிப் பள்ளியைத் தொடங்குவது என்று தீர்மானித்து, 'செல்ஃபி பரோட்டா கோச்சிங்' சென்டரை ஆரம்பித்தேன்.

பயிற்சி பெற்றவர்களின் வாய்மொழி தகவல்களாலேயே அடுத்தடுத்து மாணவர்கள் நிறைய பேர் வரத் தொடங்கினர். எங்கள் பள்ளி குறித்து யூடியூபில் விடியோ வெளியானதும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மதுரைக்கு வந்து தங்கி, எங்களிடம் பயிற்சி பெறுகின்றனர். பொருள்கள் செலவு உள்பட நாலாயிரம் ரூபாயே கட்டணமாக வசூலிக்கிறோம்.

பத்து நாள்களுக்கு தினமும் நான்கு மணி நேரம் பயிற்சி. காலையில் ஏழு மணி முதல் ஒன்பது மணி வரையும், மாலையில் மூன்று மணி முதல் ஐந்து மணி வரையும் முதல் பிரிவு நடக்கிறது. காலையில் ஒன்பது முதல் பதினொன்று வரையும் மாலையில் ஐந்து முதல் ஏழு மணி வரையும் இரண்டாம் பிரிவு பயிற்சி நடக்கிறது. தற்போது மாதத்துக்கு 150 பேர் வரை பயிற்சி பெறுகின்றனர்.

பரோட்டாவுக்கு மாவு பிசைவது எப்படி? , உருண்டை போடுவது எப்படி? , மாவை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்? , பரோட்டாவை வீசுவது, எண்ணெய் போடுவது என எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்போம். முதலில் துணி டவலில் பரோட்டாவை எப்படி வீச வேண்டும் என்று பயிற்சி கொடுத்து, அதன் பிறகு மாவை எப்படி வீசுவது என்று சொல்லிக் கொடுப்போம்.

அப்புறம், வீச்சு பரோட்டா , சிலோன், எண்ணெய், கொத்து, கோதுமை, மலபார், மலேசியா, சிங்கப்பூர்... என்று பலவகையான பரோட்டாக்கள் தயாரிப்பதையும், கிரேவி, சால்னா, சிக்கன், சைனீஸ் உணவுகளைத் தயாரிப்பதையும் சொல்லிக் கொடுக்கிறோம்.

பயிற்சி பெற வயது தடை இல்லை. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வருகிறார்கள். இலங்கையில் இருந்தும் வருகிறார்கள். வெளிநாடுகளில் ஹோட்டல் வேலைக்கு ஆள்களை எடுத்து அனுப்பும் நிறுவனத்தினர் பயிற்சிக்காக ஆள்களை அனுப்பி வைக்கிறார்கள். வெளியூர், வெளிநாட்டு மாணவர்களுக்காக தங்கும் வசதியும் செய்து கொடுக்கிறோம்.

பல ஊர்களில் இருந்தும் பரோட்டா செய்ய ஆள்கள் கேட்போருக்கும், எங்கள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து பணியைப் பெற்று தருகிறோம்.

மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐ.டி, பொறியாளர் போன்றோர் பயிற்சி பெற்றது வியப்படைய வைத்தது. தனியார் துறை ஊழியர்கள், வெளிநாடுகளுக்குப் படிக்கவும் வேலைக்காகவும் செல்பவர்கள், சிற்றுண்டிக் கடை வைத்திருக்கும் பெண்கள் போன்றோரும் பயிற்சிக்கு வருகை தருகின்றனர்'' என்கிறார் முகமது காசிம்.

வாழ்க்கையில் முன்னேற்றம்

கேரளாவில் திருச்சூரில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கிரண் பேசுகையில், 'ஹோட்டலில் எனக்கு நாளொன்றுக்கு சம்பளம் இருநூறு ரூபாய். அதே ஓட்டலின் சமையல்கூடத்தில் பரோட்டா தயாரிக்கும் மாஸ்டருக்கு சம்பளம் தினம் ஆயிரம் ரூபாய்.

அப்போது எனக்கும் பரோட்டா மாஸ்டராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

மதுரையில் பயிற்சி மையம் இருப்பதை அறிந்து, வேலையை விட்டுவிட்டு ரயில் ஏறிவிட்டடேன். நன்கு பயிற்சி பெற்றேன். இன்று, கேரளத்தில் வேறு ஒரு ஊரில் தினம் 830 ரூபாய் சம்பாதிக்கிறேன். விரைவில் இன்னும் சம்பளம் அதிகரிக்கலாம். என்னைப் போல, பலரும் பரோட்டா தயாரிக்கக் கற்று வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்' என்கிறார் கிரண்.

-எஸ். சந்திரமெளலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.