

தனது முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அக்குழந்தையைப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ். இதற்கு பாலசந்தர் காரணம் கேட்டபோது, ""என் முகத்தில் எத்தனை அம்மைத் தழும்புகள். இந்த முகத்தோடு பார்த்தால் குழந்தை பயந்துவிடாதா?'' என்றார். இதற்கு பாலசந்தர், ""உனக்கு நடிப்புதான் அழகு. கவலைப்
படாதே போய் பார். குழந்தையைக் கொஞ்சிவிட்டு ஷூட்டிங்குக்கு வா?'' என்று உற்சாகம் கொடுத்து அனுப்பினார். இவ்வளவு துன்பங்களையும் துயரங்களையும் மனதில் தேக்கிவைத்து கொண்டுதான் ரசிகர்களைச் சிரிக்க வைத்தார் நாகேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.