பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

4 படங்களுக்கு பூஜை

ஜூலை முதல் வாரத்தில் மொத்தமாக நான்கு படங்களுக்கு பூஜை போடப்பட்டிருக்கிறது.

News image
Updated On :12 ஜூலை 2025, 10:58 pm IST

ஜூலை முதல் வாரத்தில் மொத்தமாக நான்கு படங்களுக்கு பூஜை போடப்பட்டிருக்கிறது. அதில் ஓரிரு படங்களின் படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டனர். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் கே.ஜே. ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'டிமான்டி காலனி 3', 'இவன் தந்திரன் 2', பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் என நான்கு படங்களுக்கு பூஜைப் போடப்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளர் கே.ஜே. ஆர். கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் இது. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ரீகன், அறிமுக இயக்குநராக இப்படத்தை இயக்குகிறார். தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ஹீரோவாக அறிமுகமாகும் 'அங்கீகாரம்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இயக்குநர் ரா. கண்ணன் இயக்கத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இவன் தந்திரன்'.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 'வடசென்னை' சரண் நடிப்பில் வெளியாகும் என முன்பே அறிவித்திருந்தனர். இப்படத்தின் பூஜையும் நடைபெற்றிருக்கிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு 'டிமாண்டி காலனி' படத்தின் முதல் பாகம் வெளியாகியிருந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் கடந்தாண்டு வெளியானது. இப்படம் வெளியாகி ஓராண்டிற்குள்ளாகவே படத்தின் மூன்றாம் பாகத்தையும் தொடங்கிவிட்டார்கள்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு முன்பே வெளியாகியிருக்கிறது. படத்தில் தபு, சம்யுக்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இயக்குநர் பூரி ஜெகன்நாத்தும், நடிகை சார்மி கௌரும் இணைந்து படத்தை தயாரிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.