17 முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட 12 ராணுவக் கோட்டைகள் அசாதாரண வலையமைப்பு, மராட்டிய பேரரசின் கூர்மையான ராணுவத் தொலைநோக்குப் பார்வை, கட்டடக்கலை, எதிரிகள் கோட்டையை அணுகவிடாமல் தடுக்கும் போர் தந்திரங்களையும் இன்றைக்கும் சொல்கிறது. இவற்றில் சிவ்நேரி கோட்டை, லோகாட், ராய்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜய்துர்க், சிந்துதுர்க், செஞ்சி கோட்டைகள் உள்ளிட்டவை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையாலும், சல்ஹெர் கோட்டை, ராஜ்காட், கண்டேரி கோட்டை, பிரதாப்கர் கோட்டைகள் மகாராஷ்டிரா அரசின் தொல்பொருள்- அருங்காட்சியக இயக்குநரகத்தால் பாதுகாக்கப்படுகின்றன.