புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

உலகம் பலவிதம்

சந்திரனுக்கு பல நாடுகள் தங்கள் விண்கலன்களை அனுப்பத் தொடங்கி, அங்கு தங்களுக்கான இடத்தை ஆக்கிரமிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன.

Published On :

அடுத்து நிலாப்போர்

சந்திரனுக்கு பல நாடுகள் தங்கள் விண்கலன்களை அனுப்பத் தொடங்கி, அங்கு தங்களுக்கான இடத்தை ஆக்கிரமிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன. அடுத்த போர்க்களம் சந்திரன்தான் என்று சீனாவில் உள்ள நார்த்வெஸ்ட்ர்ன் பாலிடெக்னிகல் யூனிவர்சிடி பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

பூமிக்கும் சந்திரனுக்கும் ஈர்ப்புவிசை வேறுவேறு. ஆகவே பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே இந்த ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும் பகுதியில் விண்கலன்களை நிறுத்துவது, செலுத்துவது எளிது. செலவும் குறைவு. ஆனால், இந்தப் பகுதிகளில் தங்கள் விண்கலன்களை நிறுத்தி, மற்ற நாடுகளுக்கு இடையூறு செய்யவும் முடியும் என்கிறார்கள். அதாவது இப்போது ஹோர்முஸ் நீரிணையை மூடி, உலக நாடுகளுக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளதைப்போல, பூமி-சந்திரன் இடையே உள்ள பாதையிலும் தடை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.

Story image

ராஜாளி விலை ரூ 5.85 கோடி

அபுதாபியில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி விலங்குகள், பறவைகளுக்கான சர்வதேச கண்காட்சி நடந்தது. இதில் ஓர் அழகிய வகை வெள்ளை நிற ராஜாளி 15 லட்சம் தசிஹ்ரம் - இந்திய மதிப்பில் ரூ. 5.85 கோடிக்கு ஏலம் போனது. இந்த ராஜாளியை அமெரிக்காவில் மார்க் மோக்லிச் பால்கன் பார்ம் வளர்த்தது. இதன் எடை ஒரு கிலோ, நீளம் 16.5 அங்குலம். ஷைக்கா அல் மன்சூரி என்ற சிறுமியின் விருப்பத்துக்காக இந்தப் பறவையை வாங்கிக்கொடுத்துள்ளார் அவரது மாமா.

Story image

ரோபோ ரோஷம்

ரஷ்யாவில் ஒரு எலக்ட்ரானிக் கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் கடை உரிமையாளர் ஓர் எந்திரனை அறிமுகம் செய்கிறார். வந்த நபர், எந்திரனை பின்னுக்குத் தள்ளுகிறார். இதனால் கோபமடைந்த ரோபோ, வரிந்து கட்டிக்கொண்டு கைகளை மடக்கித் தாக்க வந்ததுடன், எட்டி உதைக்கத் தொடங்கியது.

கடை ஊழியர்கள் எந்திரனைப் பிடித்துக் கட்டுப்படுத்த முயன்றனர். இந்த விடியோ சமூக ஊடகங்களில் பரவியது. பல ஓட்டல்களில் உணவு பரிமாறுவதற்கு ரோபோ பயன்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர் தப்பாகப் பேசினால் அடி உதைதான்.

Story image

ஆசிரியை உலக அழகி

வியத்நாமில் நாடிராங் நகரில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் 24 வயதான டொமினிக் குடியரசைச் சேர்ந்த ஜோகிரி மோலா , உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஓர் ஆசிரியை, ஊடகர், சமூகப்பணியில் ஈடுபடுபவர். குழந்தைகள் ஆங்கிலம் கற்கவேண்டும் என்பதற்காக 'நாளைய குரல்கள்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். டி.வி. சேனலில் நிகழ்ச்சி

களைத் தொகுத்து வழங்குகிறார். கல்லூரியில் இலக்கியம் சொல்லித் தருகிறார். 24 வயதில் இத்தனை பணிகளையும் செய்து கொண்டு, அழகுப் போட்டியிலும் பங்குகொண்டு வெற்றி பெற்றுள்ளார். 1982-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இப்போதுதான் டொமினிக் குடியரசுப் பெண் ஒருவர் உலக அழகியாகத் தேர்வாகியிருக்கிறார்.

தி.செ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.