அடிகளிலோ சீர்களிலோ எழுத்தை எண்ணும்பொழுது உயிரில்லாத ஒற்றெழுத்தையும் ஆய்தவெழுத்தையும் எண்ணக்கூடாது என்பார் தொல்காப்பியர். இதனை, செய்யுளியலில்,
""உயிரில் எழுத்தும் எண்ணப்படாஅ
உயிர்திறம் இயக்கம் இன்மையான'' (தொல்.செய்.43)
என்று கூறியுள்ளார். ஏன் எண்ணக்கூடாது என்பதற்கு, அவை உயிர்போல் இயங்காமையால்' என்பார். இவ்விடத்தில் தமிழறிஞர் அடிகளாசிரியர் கூறியுள்ள செய்தி அறியத்தக்கதாகும்.
"உயிரில்லெழுத்தும் என்றதிலுள்ள எச்ச உம்மையால் குறுகிய உயிர்த்தாகிய குற்றியலிகரமும், குற்றியலுகரமும் எண்ணப்படா வென்று கொள்க. எனவே, எண்ணப்படுவன உயிர் உயிர்மெய்யுமாகி இரு மாத்திரையிற் குறையாதன என்று கொள்ளப்படும்' என்று விளக்கவுரை கூறியுள்ளார் இளம்பூரணர். இக்கருத்தை,
குற்றுகரம் குற்றிகரம் என்றிரண்டும் ஆய்தமும்
ஒற்றும் எனவொரு நான்கொழிந்துக் } கற்றார்
உயிரும் உயிர்மெய்யும் ஓதினர் எண்ணிச்
செயிரகன்ற செய்யு ளடிக்கு.
(யாப்பருங்கல விருத்தி பழைய உரை,ப.113)
என்ற வெண்பா கூறுவதைக் காண்க. எனவே, செய்யுளுக்கு உயிர்த்திற இயக்கம் வேண்டும் என்பது பெறப்பட்டது. மேலும், அடிகளாசிரியர் யாப்பருங்கல விருத்தியுரை 36-ஆம் நூற்பா உரையைக்கொண்டு, "அடிக்கு எழுத்து எண்ணுமாறு போலாது தொடைக்கு எல்லா எழுத்தும் கொள்ளப்படும் என்று வேறுபாடு கூறுவர்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


