இந்த வார கலாரசிகன்
நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாகவே இருக்கிறது. அவன் அருள் இருந்தால் மட்டுமே அவன்தாள் பணிதல் சாத்தியம் என்கிற மணிவாசகப் பெருமானின் கூற்றைப்போல, நினைப்பதால் மட்டுமே எதுவும் நடந்துவிடுவதில்லை என்பதை வெள்ளிக்கிழமை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.









