தமிழ்நாட்டில் வீசிய புயல்!
இலக்கியங்கள் அவை எழுதப்பெற்ற காலச் சமூகத்தை எதிரொளிப்பதால் அவை காலக் கண்ணாடி எனப்பெறுகின்றன. சில இலக்கியங்கள் பெரும்பான்மையாகச் சமூகத்தையும், சிறுபான்மையாகப் புனைவையும் கொண்டு எழுதப்பெறுகின்றன. இவற்றினூடே வெகு சில இலக்கியங்கள் நடந்த நிகழ்வை அப்படியே பதிவு செய்திருப்பதையும் காணமுடிகிறது.









