மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

எட்டு வழி வாயில் கவிதை

எப்பக்கத்தில் தொடங்கிப் படித்தாலும் அச்செய்யுளே எவ்வெட்டெழுத்து உடைய நான்கு அடிகள் உடையதாய், அறுபத்து நான்கு அறைகளிலே முதல் அறை தொடங்கி ஒரு முறையும்

News image
Updated On :23 செப்டம்பர் 2017, 10:29 pm

இராம. வேதநாயகம்

எப்பக்கத்தில் தொடங்கிப் படித்தாலும் அச்செய்யுளே எவ்வெட்டெழுத்து உடைய நான்கு அடிகள் உடையதாய், அறுபத்து நான்கு அறைகளிலே முதல் அறை தொடங்கி ஒரு முறையும், இறுதி அறை தொடங்கி ஒரு முறையுமாக இருமுறை எழுதி இயையுமாறு பாடப்படும் செய்யுள், ""சருப்பதோ பத்திரம்'' என்று வழங்கப்படும். இவ்விளக்கம், ""சித்திர கவி விளக்கம்'' என்னும் பரிதிமாற் கலைஞரின் நூலில் அழகுற விளக்கப்பட்டுள்ளது. ""சருப்பதோ பத்திரம்'' என்னும் செய்யுளின் இலக்கணத்தை மாறனலங்காரத்தில் தெள்ளிதின் காணலாம். இவ்விலக்கணத்தில் அமைந்த பரிதிமாற் கலைஞரின் செய்யுள் ஒன்று வருமாறு:

""மாவா நீதா தாநீ வாமா
வாயா வாமே மேவா யாவா
நீவா ராமா மாரா வாநீ
தாமே மாரா ராமா மேதா''

இதன் பொருள்: மாவா - பெருமையை உடையவனே; நீதா - நீதியை உடையவனே; தாநீவா மாவா - வலிமை நீங்காத செல்வம் உடையவனே; யாவாமே மேவா யாவா (மே வாயா வா யா மே) - சேரக் கடவாய் வாயாதனவாக எனவைதாம் ஆகும்?; நீ வா - நீ வருதி; ராமா மாரா - இராமனை ஒப்பவனே, மன்மதனை ஒப்பவனே; ஆ - காமதேனுவை ஒப்பவனே; ஆமா - ஒழுங்குடையவனே; மேதா - நல்லுணர்வு உடையவனே; மே மார் ஆர் - மேன்மை பொருந்திய நின் மார்பில் உள்ள ஆத்தி மாலையை; நீ தா - நீ தருதி. இச்செய்யுளை 64 அறைக் கட்டங்களில் அடைத்துப் பார்ப்போம்:
இச்செய்யுளை எட்டு விதமாகப் படிக்கலாம். 

1. நான்கு நான்கு வரிகளாக முதல் அறையிலிருந்து வலப் பக்கமாக வாசித்தல்.
2. வாசித்தவாறே இறுதியிலிருந்து முதல் வர வாசித்தல்.
3. முதல் அறையிலிருந்து மேலிருந்து கீழாக வாசித்தல்.
4. வாசித்தவாறே கீழிருந்து மேலாக வாசித்தல்.
5. முதல் வரியின் இறுதிக் கட்டத்திலிருந்து மேலிருந்து கீழாகவாசித்தல்.
6. வாசித்தவாறே கீழிருந்து மேலாக வாசித்தல்.
7. இறுதி வரியின் முதல் தொடங்கி இடப் பக்கமாக வாசித்தல்.
8. அப்படியே இறுதியிலிருந்து முதல் வரை வாசித்து முடித்தல்.ஆக, இவ்வாறு எட்டுவிதமாக எந்தப் பக்கம் வாசித்தாலும் பாடல் சரியாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.