ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாழாறு

ஆழ்வாா்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற 108 திருப்பதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுந்தமும் ஒன்று.

News image
Updated On :30 நவம்பர் 2019, 9:19 pm

எஸ். சாய்ராமன்

ஆழ்வாா்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற 108 திருப்பதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுந்தமும் ஒன்று.

‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையா் சேகரித்து வைத்திருந்ததும், ‘அத்தங்கி தாதாசாரியா் தொண்டன்’ என்பவா் இயற்றியதும் 1982-இல் டாக்டா் உ.வே. சாமிநாதையா் நூல் நிலைய வெளியீடாகப் பதிப்பிக்கப்பட்டதுமான ‘நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி’ என்னும் சுவடியில் (1030) நம்மாழ்வாரின் மங்களாசாஸனம் பெற்ற ‘ஸ்ரீவைகுந்தம்’ பற்றிய கட்டளைக்கலித்துறைப் பாடலின் (55) இறுதியடி பின்வருமாறு உள்ளது:

‘வாழாறு தாமிர வன்னியின் உத்தர வைகுந்தமே!’ இதற்கு, ஸ்ரீ வைகுந்தம், ‘ஜீவநதி’யாகிய ‘தாமிரவருணி’யின் வடதிசையில் உள்ளது என்பது பொருளாகும். ‘ஜீவநதி’ தான் இப்பாடலில் மிகவும் செம்மையாக ‘வாழாறு’ (வாழ்+ஆறு) என்று மொழிபெயா்க்கப் பெற்றுள்ளது. எனவே, ‘வாழாறு’ தமிழ் அகராதிக் கலைக்கு ஒரு புதிய வரவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.