திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருமி கண்ட தமிழன்!

சீனாவில் "வூஹான்' நகரிலுள்ள இறைச்சிச் சந்தைகளில் உருவாகிப் பரவி வருவதுதான் "கொவைட்-19' என்று பெயரிடப்பட்டுள்ள "கரோனா' கிருமி.

News image
Updated On :4 ஏப்ரல் 2020, 2:22 am



சீனாவில் "வூஹான்' நகரிலுள்ள இறைச்சிச் சந்தைகளில் உருவாகிப் பரவி வருவதுதான் "கொவைட்-19' என்று பெயரிடப்பட்டுள்ள "கரோனா' கிருமி. இது உலகையே அச்சுறுத்தி வருவதுடன், பல ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மனித உயிர்களை பலிவாங்கி வருகிறது.

கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகள் குறித்து "அபிதான சிந்தாமணி' பல குறிப்புகளைத் தருகிறது. பழந்தமிழர்கள் கிருமிகள் குறித்துக் கண்டுபிடித்து, அவற்றை அறிந்து வைத்திருந்தார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது.

மனித உடலில் அழுக்குகள் சேர்ந்துள்ள இடங்கள், சளி நிலவுமிடங்கள், குருதி, மலம் தேங்கும் இடங்கள் இங்கெல்லாம், ஏறத்தாழ 20 வகை நுண்கிருமிகள் உண்டாகுமாம். 
சளி நிலவும் தொண்டைப் பகுதி, மூச்சுக்குழல், நுரை யீரல் உள்ளிட்ட இடங்களில் பெரும்பூநாகக்கிருமி, நீர்ப்பாம்புக்கிருமி, நெல்முளைக் கிருமி, சந்ந நீளக்கிருமி, அணுக்கிருமி, வெண் கிருமி,  செங்கிருமி என்னும் ஏழு வகையான கிருமிகள் உருவாக வாய்ப்புண்டு எனக் கண்டறிந்தனர். இவற்றுள்ளான செங்கிருமியை - 
"கொவைட் 19' கிருமியுடன் ஒப்புநோக்கலாம்.

நரம்பு மண்டலத்தில் அணுக்கிருமி, வட்டக்கிருமி, மிகுசூட்சுமக் கிருமி, காலில்லாக்கிருமி,  செங்கிருமி, தோன்றாக்கிருமி என்னும் ஆறுவகைக் கிருமிகள் உருவாகும்.
மலத்தில் ககேருகம், மகேருகம், சவுரசம், சலூனம், லேலிகம் ஆகிய ஐந்துவகைக் கிருமிகள் உருவாகும். இந்த எல்லாவகைக் கிருமிகளால் உண்டாகும் நோய்களை, "கிருமி ரோகம்' என்றழைத்தனர் நம் பண்டைத் தமிழர்.

இக்கிருமிகளை முருக்கம்விதைக் கற்கம், பாகற் குடிநீர், வாய்விளங்கக் குடிநீர், வேப்ப(ம்) நெய் முதலியவற்றால் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என முற்கால சித்த மருத்துவர்கள் கண்டறிந்து வைத்திருந்தனர்.

வைணவப் பெரியராகிய கூரத்தாழ்வாரின் கண்ணைப் பிடுங்கினான் ஒரு சோழன் என்பது செவிவழிச் செய்தியாகும். ஆனாலும், இந்தச் சோழனைப் பார்க்கக்கூடாது என்று கருதிய கூரத்தாழ்வார் இவன் மீது கண்ணைப் பிடுங்கி எறிய, இவனுக்குக் "கிருமி ரோகம்' ஏற்பட்டது என்றும்; அதனால் அவனுக்குக் "கிருமிகண்ட சோழன்' எனப் பெயர் வந்தது என்றும் கூறுவர். 

இவனது இயற்பெயர் அறியப்படவில்லை.

நுண்பெருக்கி முதலிய அறிவியல் கருவிகள் கண்டுபிடிக்கப்படாததற்கு முன்பே இருபது வகையான நுண் கிருமிகளைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள் நம் பழந்தமிழர்கள் என்பது வியப்பூட்டும் செய்தியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.